தத்துவங்கள் 96
https://www.youtube.com/watch?v=g4uYMhSeh7Y
https://www.youtube.com/watch?v=q1BgutFNosM
https://www.youtube.com/watch?v=zIdso_fc_l8
https://www.youtube.com/watch?v=XpZbYfYrNcc
https://www.youtube.com/watch?v=HuWs_c24VnY
தத்துவங்கள் 96 கீழே அதன் விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது , இது ஒவ்வொருவரும் யோகா கலையின் மூலம் உணரக்கூடியதே , முழுவதும் உணர்ந்தால் தான் நன்கு புரியும்
ஞானேந்திறியம் - 5
பொறி - 5
புலன்கள் - 5
கர்மேந்திரியம் - 5
அந்தக்கரணம் - 4
ஆக
தத்துவங்கள் - 24
வித்யா தத்துவம் - 7
சிவ தத்துவம் - 5
பிற கருவிகள் - 60
மொத்தமாக 96 தத்துவங்கள்
சற்று விரிவாக :
பூதங்கள் 5
ஞானேந்திறியம் 5
ஞ்யநேந்திரிய கிரியைகள் 5
கன்மேந்திரியம் 5
கன்மேந்திரிய கிரியைகள் 5
அறிவு1
கரணம் 4
நாடி 10
வாய்வு 10
ஆசயம் 5
கோசம் 5
ஆதாரம் 6
மண்டலம் 3
மலம் 3
தோஷம் 3
ஈஷனை 3
குணம் 3
விராகம் 8
வினை 2
அவஸ்தை 5
மொத்தமாக 96
தனி தனியாக தத்துவ விளக்கம் :
பூதங்கள் 5 விளக்கம் :
1.ஆகாயம் : பரவெளி - நிறம் - ஸ்படிகம் , இதன் கூறுகள் : காமம் , குரோதம் லோபம் , மோஹம் , மதம் ; மொத்தமாக 5
2வாய்வு : காற்று - நிறம் - புகை , பச்சை , ஸ்படிகம் . இதன் கூறுகள் : இருத்தல்,நடத்தல் ,ஓடல் ,கிடத்தல் ,நிற்றல்மொத்தமாக 5
3.தேயு : நெருப்பு / அக்னி - நிறம் - சிகப்பு , இதன் கூறுகள் : பயம் , அகங்காரம் , சோம்பல் , நித்திரை , மைதுனம் ; மொத்தமாக 5
4.அப்பு : ஜலம் - நிறம் - ஸ்படிக வெள்ளை . இதன் கூறுகள் : உதிரம் , மச்சை , சிறு நீர் , மூளை , சுக்கிலம் ; மொத்தமாக 5
5.பிருதிவி : மண் - நிறம் - பொன்மை . இதன் கூறுகள் : மயிர் , தோல் நரம்பு , எலும்பு , இறைச்சி மொத்தமாக 5
ஞ்யநேந்திரியம் 5 விளக்கம் :
1.சுரோத்திரம் - காது சப்தங்களை கேட்கும்.
2.த்வக்கு -மேல் தோல் - ஸ்பரிச உணர்வு.
3.சட்சூ -கண் - ரூபங்களை பார்க்கும்.
4.சிங்குவை-நாக்கு - அறுசுவைகளை அறியும்.
5.ஆகிரணம்-நாசி - வாசனைகளை அறியும்.
ஞ்யநேந்திரிய கிரியைகள் 5 விளக்கம் :
1.சப்தம்-செவியில் நின்று கேட்பது.
2.ஸ்பரிசம்- தேகத்தில் , சர்மத்திலிருந்து சுகமென்பதை தெரிவிக்கும்.
3.ரூபம்- கண்ணில் நின்று பல காட்சிகளை காண்பிக்கும்.
4.ரசம்-நாவில் நின்று அறுசுவையின் பேதங்களை அறிவிக்கும்.
5.கந்தம்- நாசியில் இருந்து வாசனை பேதங்களை உணர்த்தும்.
கன்மேந்திரியம் 5 விளக்கம் :
1.வாக்கு - வாய் - பேசுவது.
2.பாணி - கை - ஆட்டி அசைத்து வேலை செய்தல்.
3.பாதம் - கால் - நடத்தல்.
4.உபஸ்த்தம் - நீர் வரும் குறி - காம சுகம் அனுபவித்தல்.
5.குதம் - பாயுரு - ஆசனவாய்.
கன்மேந்திரிய கிரியைகள் 5 விளக்கம் :
1.வசனம் - வாயில் இருந்து பேசுவிப்பது.
2.தானம் - கையில் இருந்து கொடுப்பது.
3.கமனம் - காலில் நின்று நடத்துவிக்கும்.
4.ஆனந்தம் - லிங்கம் , யோனியில் நின்று கர்மானந்தம் விளைவிக்கும்.
5.விசர்ஜனம் - அபானத்தில் நின்று மலத்தை வெளியேற்றும்.
அறிவு 1 விளக்கம் :
1.அறிவு அல்லது உள்ளம் . இது ஆகாயத்தின் அம்சம் , ஆகையால் உச்சியில் இருந்து சகலத்தையும் செயல்விக்கும்.
நாடிகள் 10 விளக்கம் :
1.இடகலை - வலது கால் பெரு விரலில் இருந்து அசைந்து இயங்கி ஏறி இடது நாசியை பற்றி நிற்கும்.
2.பிங்கலை - இடது கால் பெரு விரலில் இருந்து அசைந்து இயங்கி ஏறி வலது நாசியை பற்றி நிற்கும்.
3.சுழுமுனை - குதத்தை பற்றி நின்று ஏறி பிராண வாயுவை சேர்ந்து சிரசளவு முட்டி நிற்கும்.
4.சிங்குவை - உண்ணாக்கில் நின்று அன்ன சாரம் ஊரவும் பானத்தை விழுங்கவும் செய்யும்.
5.புருடன் - வலக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்.
6.காந்தாரி - இடக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்.
7.அத்தி - வலக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்.
8.குரு - இடக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்.
9.அலம்புடை - கண்டத்தில் இருந்து நாசியில் கசிந்து நீரை ஏற்ற இறக்க உபாயங்கள் செய்யும்.
10.சங்கினி - உபஸ்தத்தில் இருந்து ஆனந்தத்தில் மிஞ்ச வொட்டாமல் காக்கும்.
வாயு 10 விளக்கம் :
1.பிராணன் - மூலாதாரத்தை சேர்ந்து மேல் நோக்கி இதயத்தில் நின்று நாசியில் சென்று திரும்பி அலையும்படி செய்யும்.
2.அபானன் - குதத்தை பற்றி நின்று ஜாடராக்கினியாய் உஷ்ணத்தை உண்டாக்கி , உண்ட அன்ன பானாதிகளை ஜீரணிக்க செய்யும்.
3.வியானன் - சர்வாங்கமும் வியாபித்து இருந்து பொருத்திடங்கள் எல்லாம் களைப்பும் தவனமும் உண்டாகசெய்யும்.
4.சமானன் - சரீரத்தின் நடுவான நாபிஸ்த்தானத்தில் நின்று ஜீரணித்த அன்ன பானாதிகளை உதிரமாக்கி ரத்த நாடிகளின் வழியாக இழுத்து சென்று சமமாக பரவி தேகத்தை வளர்க்கும்.
5.உதானன் - கண்டஸ்தானத்தில் நின்று சத்ததோடே கலந்து குரலோசை செய்ய , பேசக்கூடிய காரியத்தை செய்யும்.
6.நாகன் - வாயில் இருந்து வாந்தி செய்விக்கும்.
7.கூர்மன் - கண் ரப்பையில் இருந்து விளிக்கசெயும்.
8.கிரிதரன் - மூக்கில் நின்று குறுகுறுத்து தும்மல் உண்டாக்கும்.
9.தேவதத்தன் - மார்பில் நின்று கபத்தை சேர்த்து நெட்டி , கொட்டாவி , விக்கல் உண்டாக்கும்.
10.தனஞ்செயன் - பிராணன் நீங்கின பிறகும் 3 நாட்கள் மட்டும் இருந்து சரீரம் வீங்கி வெடித்து போவான் , அக்னியில் சுடும்போது அப்போதே போய்விடும்.
ஆசயம் 5 விளக்கம் :
1.ஆமாசயம் - அன்னம் , தண்ணீர் பருகுமிடம்.
2.ஜலாசயம் - அன்னம் , தண்ணீர் இறங்குமிடம்.
3.மலாசயம் - மலம் சேருமிடம்.
4.ஜலஞ்சயாசம் - மூத்திரம் சேருமிடம்.
5.சுக்கிலாசயம் - விந்து நிறைந்து இருக்குமிடம்.
கோசங்கள் 5 விளக்கம் :
1.அன்னமய கோசம் - ஸ்தூல சரீரத்தை அழிக்காமல் நிலைக்கசெயும்.
2.பிராணமய கோசம் - பிராண வாயும் கர்மேந்திரியங்களும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும சரீரத்துடன் சேர்ந்து விவகாரம் செய்யும்.
3.மனோமய கோசம் - மலமும் கண்மேந்திரியமும் சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில் சேர்ந்து செயல்படும்.
4.விஞ்ஞானமய கோசம் - புத்தியும் பொறிகளும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில் செயல்படும்.
5.ஆனந்த மய கோசம் - காரண சரீரத்துக்கு ஆதாரமாக இருந்து மேற்கூறிய பிராண , மனோமய , விஞ்ஞானமய கோசத்துடன் சூட்சும சரீரம் நிலைத்து நிற்கும்.
ஆதாரங்கள் 6 சிறு விளக்கம் :
1.மூலாதாரம் - குதத்துக்கும் , குய்யத்துக்கும் மத்தியில் உள்ள திரிகோண ஸ்தானம் , தேவி வல்லபை இதற்க்கு அதிர்ஷ்டான மூர்த்தி - விநாயகர்.
2.சுவாதிஷ்டானம் - முதுகுத்தண்டின் அடிப்பகுதி சமீபம் , ஆண்குறி அல்லது பெண்குறி அடிபகுதியில் உள்ள நாற்கோண ஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி பிரம்ம தேவர் , தேவி சரஸ்வதி.
3.மணிபூரகம் - நாபிச்தானத்திற்கு மேலுள்ள பிறை போல் வளைந்த ஸ்தானம் ,இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகா விஷ்ணு , தேவி மகாலட்சுமி.
4.அனாஹதம் - ஹிருதய ஸ்தானத்தில் உள்ள முக்கோண ஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி.
5.விசுத்தி - கண்டத்தில் உள்ளது , அருகோனஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி.
6.ஆக்ஞா - முகத்தில் உள்ள புருவ மத்தி - திரிகோண உச்சஸ்தானம், இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி சதாசிவன் , தேவி மனோன்மணி.
அக்னி மண்டலம் 3 விளக்கம் :
1.அக்னி மண்டலம் - மூலாதாரத்தில் இருந்து இளகி நாபி வரையில் முயற்சி செய்யும்.
2.ஆதித்த மண்டலம் - நாபியில் இருந்து கண்டம் வரை ஸ்திரம் செய்யும்.
3.சந்திர மண்டலம் - கண்ட ஸ்தானத்தில் இருந்து புருவ மத்தி வரை ஸ்திரமாகும்.
மலங்கள் 3 விளக்கம் :
1.ஆணவ மலம் - ஸ்தூல சரீரத்தை நான்தான் என்று நினைத்து இருக்கும்.
2.காமிய மலம் - கண்ணால் கண்டவைகளை எல்லாம் இச்சிக்கும்.
3.மாயா மலம் - தனக்கு நேரும் நிலையை தானறியாமலே செய்தல் , கோபம் கொள்ளல்.
முப்பிணிகள் :
1.வாதம் - வாயுவின் கோபம்.
2.பித்தம் - அக்னியின் கோபம்.
3.சிலேத்துமம் - அப்புவின் கோபம்.
ஈஷணை 3 விளக்கம் :
1.தாரேஷனை - பெண்ணாசை ( ஆணாசை ) அதிகம் கொள்ளல்.
2.புத்திரேஷனை - புத்திர , புத்திரி மீது அதிக ஆசை.
3.அர்தேஷனை - பொருள்கள் மீது அதிக ஆசை வைத்தல்.
குணங்கள் 3 விளக்கம் :
1.சாத்வீகம் - நிறம் வெண்மை , சகலரும் மதிப்பர் , அமிர்த குணம் , இதில் லயித்து இருப்பவர் தத்துவ ஞான நிஷ்டை அடைவர்.
2.ராஜஸ குணம் - நிறம் சிவப்பு , இக்குணம் படைத்தவர் அகங்காரம் ஆணவம் உடன் இருப்பார்.
3.தாமச குணம் - நிறம் கருப்பு , இவர்கள் அதிக உணவு சோம்பல் , நித்திரை , மிகுந்த கோபம் எதிலும் நிலை இன்மை உடையவர்.
விரகங்கள் 8 விளக்கம் :
1.காமம் - அதிக ஆசை கொள்ளல்.
2.குரோதம் - பகை கொள்ளல் , அன்பில்லாமை.
3.லோபம் - பிறர்க்கு ஈயாதவர் , கருமி.
4.மோகம் - பலவற்றிலும் ஆசைப்படுதல்.
5.மதம் - பிறரை மதியாதிருத்தல்.
6.மாச்சரியம் - மனதில் சதா விரோத எண்ணங்கள்.
7.இடும்பை - எல்லோரையும் உதாசீனபடுத்துதல்.
8.அஸ்சூயை - பொறாமைக்குணம்.
அவஸ்த்தைகள் 5 ஸ்தானங்கள் :
1.சாக்கிரம் - லலாடஸ்தானம் - ஆக்ன்யா சக்கரம்.
2.சொப்பனம் - கண்டஸ்தானம் - விசுத்தி சக்கரம்.
3.சுழுப்தி - ஹிருதயஸ்தானம் - அனாஹதம் சக்கரம்.
4.துரியம் - நாபிஸ்தானம் - மணிபூரகம் சக்கரம்.
5.துரியாதீதம் - குய்யஸ்தானம் - ஸ்வாதிஷ்டானம் , மூலாதாரம் சக்கரம்.
மொத்தமாக 96 தத்துவங்கள் , இவை அனைத்தையும் அவர் அவர் அனுபவத்தில் உணர்ந்து அறிந்து தாண்டிய பிறகு , முக்தி என்னும் நிலைக்கு அடி எடுத்து வைக்கிறோம் .
தெரிந்தால் தெரியாதது போல் பேசுவான் அறிவாளி. தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் உளரிக் கொட்டுவான் முட்டாள்.
மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது.
Comments
Post a Comment